தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு: பவானியில் 25 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது

பவானி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானியில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை தொடர்ந்து, அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் நீர் வெளியேற்றம் நேற்று இரவு 90 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இதனால், காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisement

ஈரோடு மாவட்டம் பவானியில் ஆற்றங்கரையோர பகுதிகளான கந்தன் நகர், பசுவேஸ்வரர் வீதி, மீனவர் தெரு, பழைய பாலம், பாலக்கரை ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் இருந்து பொதுமக்கள் உடைமைகளுடன் நேற்று இரவு வெளியேறினர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பவானி கந்தன் நகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. பவானி பழைய பாலம் பகுதியில் வீடுகளின் படிகளைத் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் கரையோர பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டதுடன், ஆற்றில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தனர். காவிரி-பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடும் பகுதியை தண்ணீர் சூழ்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது இதனால், படித்துறைக்கு செல்லும் வழித்தடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. படித்துறையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி-நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை இணைக்கும் பழைய பாலம் மூடப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி வெள்ளம் கூடுதுறை வழியாக பவானி ஆற்றில் உட்புகுந்ததால் சுமார் 15 அடி உயரத்துக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்ட தலைமை நீரேற்று நிலையத்தைத் தாண்டி, காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்பகுதி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

Advertisement

Related News