தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு கேள்விக்கு ஒன்றிய அரசின் பதிலால் ராகுல் காந்தி அதிருப்தி: வெளிப்படையான துரோகம் என கருத்து

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக 3 கேள்விகளை கேட்டிருந்தார். அந்த கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளித்திருந்தது. இது குறித்து ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். அதன் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. உறுதியான கட்டமைப்பு, காலக்கெடு திட்டம், நாடாளுமன்றத்தில், பொதுமக்களுடன் உரையாடல் இல்லை. பல மாநிலங்களில் வெற்றிகரமான சாதி கணக்கெடுப்புகளின் உத்திகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் அரசும் விரும்பவில்லை.

Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடி அரசின் இந்த நிலைப்பாடு நாட்டின் வெகுஜன மக்களுக்கு வெளிப்படையான துரோகமாகும்’’ என கூறி உள்ளார்.ஒன்றிய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்னர் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு வினாக்கள் இறுதி செய்யப்படுகிறது. முந்தைய கணக்கெடுப்பில் கற்றுக்கொண்டவை அடுத்த பயிற்சியில் கருத்தில் கொள்ளப்படுகின்றன’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement