தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாதிய சக்திகளை ஒன்றாக எதிர்ப்போம் கலப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் துணை நிற்கும்: பாலகிருஷ்ணன் உறுதி

நெல்லை: ‘கலப்பு திருமணங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் ஆதரவு தெரிவிக்கும்’ என்று பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கலப்பு திருமணத்தை நடத்தி வைத்ததால் நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதை கண்டித்து நேற்று மாலை பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலாகிருஷ்ணன் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒட்டு மொத்த சமூகமும் சாதி வெறி சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கிறது. சாதிகள் பெயரால் படுகொலைகள் நடப்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதியின் பெயரால் கொலைகள் நடப்பதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் கூலிப்படையை வைத்து சாதி வெறியை உருவாக்குவதும், கூலிப்படையை பயன்படுத்தி சமூக பிரச்னைகளை உருவாக்குபவர்களை அடையாளம் கண்டு களைய வேண்டும். சாதி மறுப்பு திருமணங்களை தொடர்ந்து நாங்கள் செய்து வைப்போம். அரசு இத்தகைய திருமணங்களை முடிப்போருக்கு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement

Advertisement

Related News