தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரோட்டில் சாதி மறுப்பு திருமணம் புதுப்பெண்ணை காரில் கடத்திய சகோதரி: உறவினர்களுடன் கைது

ஈரோடு: சாதி மறுப்பு திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திய பெண் உள்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). இவரும், அந்தியூர் மேல் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள், கடந்த 5ம் தேதி, காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

Advertisement

இந்த திருமணத்தை மகாலட்சுமியின் பெற்றோர் ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த 9ம் தேதி, சேதுராஜும், மகாலட்சுமியும், பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர். இதனை அறிந்த மகாலட்சுமியின் சகோதரி கௌசல்யா உறவினர்களுடன் பெருந்துறைக்கு வந்து பஸ் ஸ்டாண்டிற்கு வருமாறு போன் செய்துள்ளார். இதனால், சேதுராஜும், மகாலட்சுமியும் பெருந்துறை பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். அப்போது, கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள், மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து சேதுராஜ் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரித்தனர். இதில், சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவரது வீட்டில் மகாலட்சுமியை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் சத்தியமங்கலம் சென்ற போலீசார் மகாலட்சுமியை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தி சென்ற, கோத்தகிரியைச் சேர்ந்த அவரது சகோதரி கௌசல்யா (25), அவரது கணவர் சந்தோஷ் (26), மற்றும் சாதிக் (27), லோகேஷ்வரன் (21), தனபால் (45) ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement