தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பு வீட்டு உதவி திட்டம் உருவாக்கக் கோரி வழக்கு: விசாரணை தள்ளி வைப்பு

 

Advertisement

மதுரை: சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கீடு செய்யாமல் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான இலவச வீட்டுமனை குறித்த விபரங்களை சேகரித்து, தகுதியான பட்டியலின பயனாளிகளை கண்டறிந்து இலவச வீட்டுமனையை ஒதுக்கீடு செய்யுமாறும், தமிழ்நாடு ஆதிதிராவிட குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ், ஒன்றிய, மாநில அரசின் நிதி உதவியுடன் ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தது ரூ.5 லட்சம் வழங்கும் வகையில் சிறப்பு வீட்டு உதவி திட்டத்தை உருவாக்கி, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி பூர்ணிமா ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

 

Advertisement