தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உச்சநீதிமன்றத்தில் 90 ஆயிரம் வழக்குகள் நிலுவை; மீண்டும் ‘வாய்தா’ கேட்பது சாமானிய மக்களை பாதிக்கும்: வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பிய நீதிபதிகள்

Advertisement

புதுடெல்லி: வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய வழக்கறிஞரை, நீதிமன்றத்தில் குவிந்துள்ள நிலுவை வழக்குகளைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர். நீதித்துறையில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உச்சநீதிமன்றத்தில் மட்டும் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தச் சூழலில், காரணமின்றி விசாரணையை ஒத்திவைக்கும் ‘வாய்தா’ கலாசாரம் குறித்தும், அதனால் நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்தும் நீதிபதிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

புதிதாகப் பதவியேற்றுள்ள தலைமை நீதிபதி சூர்யா காந்தும், நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதே தனது முதல் மற்றும் முக்கியமான பணி என்று முன்னரே அறிவித்துள்ளார். இந்நிலையில், காபி கொட்டைகள் திருடப்பட்ட விவகாரம் மற்றும் அத்துமீறல் தொடர்பான கிரிமினல் வழக்கு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதல் அவகாசம் கேட்டதால் அதிருப்தியடைந்த நீதிபதி நாகரத்னா, ‘இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இது விரைவில் ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். இதற்கு யார் பொறுப்பு?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ‘வாய்தா வாங்குவது வழக்கறிஞர்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம்; ஆனால், சரியான நேரத்தில் நீதியை எதிர்பார்க்கும் சாமானிய மக்களுக்கு இது உதவாது; வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவது மனுதாரர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறிய நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த வழக்கைச் சமரசத் தீர்வு மையத்திற்கு அனுப்பி உத்தரவிட்டனர்.

Advertisement

Related News