மக்கள் நலப் பணியாளர் வழக்கு - மறுஆய்வு மனு தள்ளுபடி
டெல்லி : மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி தர மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement