தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.5 கோடி கேட்டு பெண் டாக்டரிடம் டார்ச்சர்: கணவர் மீது வழக்கு

புதுச்சேரி: பெண் டாக்டரிடம் ரூ.5 கோடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக டாக்டர் கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி திருவண்டார்கோவிலை சேர்ந்தவர் சக்தி ஞானவேல். இவரது மகள் டாக்டர் ரூபஸ்ரீ (29). இவருக்கும், சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூபஸ்ரீக்கு அவரது பெற்றோர் 55 சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். லட்சுமி நாராயணன்-ரூபஸ்ரீ தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

Advertisement

இந்நிலையில் ரூபஸ்ரீயின் தந்தை சக்தி ஞானவேலுவிடம் ஒரு இடம் வாங்குவதற்காக ரூ.2 கோடி வேண்டும் என ேகட்டு லட்சுமி நாராயணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் வரதரட்சணை போதவில்லை இன்னும் வாங்கி வரவேண்டும் என்றும் சிதம்பரத்தில் புதிதாக மருத்துவமனை கட்டுவதற்காக ரூ.5 கோடி வாங்கி தரக்கோரி ரூபஸ்ரீயை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ரூபஸ்ரீ மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரூபஸ்ரீயை அவரது தாய் வீட்டுக்கு லட்சுமி நாராயணன் மற்றும் அவரது பெற்றோர் அனுப்பி விட்டனர். அப்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டபோது ரூபஸ்ரீக்கு, மாப்பிள்ளை வீட்டார் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து ரூபஸ்ரீ வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement