தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

67 வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: உத்தரப் பிரதேச போலீஸ் அதிரடி

 

Advertisement

ஆசம்கர்: கொலை, கொள்ளை, மாடு கடத்தல் உட்பட 67 வழக்குகளில் தொடர்புடைய, தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பிரபல குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு என 67 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி வக்கீப்பை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், இவரது தலைக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘வக்கீப் மீது ஆசம்கர், கோரக்பூர், குஷிநகர், சந்த் கபீர் நகர் மற்றும் ஜான்பூர் மாவட்டங்களில் மட்டும் கொலை, கொள்ளை, கால்நடை கடத்தல் மற்றும் திருட்டு தொடர்பாக குறைந்தது 67 வழக்குகள் இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆசம்கர் மாவட்டம், ஜோகஹ்ரா கிராமத்தில் உள்ள சோட்டி சரயு ஆற்றின் அருகே தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை, ஆசம்கர் அதிரடிப் படை மற்றும் சிதாரி போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது, குற்றவாளிகள் திடீரென போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. போலீசார் தற்காப்புக்காக நடத்திய பதிலடித் துப்பாக்கிச் சூட்டில் வக்கீப் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டான். அவனுடன் இருந்த மேலும் மூன்று கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ என்றார்.

Advertisement

Related News