தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாநகர் 6வது அவென்யூவில் மரம் விழுந்து கார் சேதம்: ஐஏஎஸ் பயிற்சி பெண் தப்பினார்

 

Advertisement

அண்ணாநகர்: சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கீதா(52). இவர் அண்ணாநகரில் உள்ள ஐஏஎஸ் அகாடமில் படிக்கின்றார். நேற்று இவர், அண்ணாநகர் 6வது அவென்யூவில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு படிக்க சென்றபோது திடீரென அங்குள்ள மரம் சரிந்து தனது காரில் விழுவது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் 8வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் கார் மீது விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதில் கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதுசம்பந்தமாக கீதா கொடுத்த புகாரின்படி, அண்ணாநகர் போலீசார் சி.எஸ்.ஆர் அளித்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி முகப்பேர் பகுதியில் மரம் விழுந்து கார் சேதம் அடைந்தது. இதில் டிரைவர் உயிர் தப்பினார். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்து பெண் தப்பியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘’பருவமழை தொடங்க இருப்பதால் மரத்தின் அடியில் பொதுமக்கள் நிற்கவேண்டாம். அதே போல் மரத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தக்கூடாது. அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்’ என்றனர்.

 

Advertisement