தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப பலி

Advertisement

கரூர்: ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). தனியார் கம்பெனி சூபர்வைசர். மனைவி மோகனா(40), மகன் சுதர்சன் (15), மகள் வருணா (10), மாமியார் இந்திராணி(67) ஆகியோருடன் கடந்த 20ம்தேதி மாலை காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு ஈரோடுக்கு புறப்பட்டனர். காரை கிருஷ்ணகுமார் ஓட்டினார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கிருஷ்ணகுமார், வருணா, இந்திராணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மோகனா, சுதர்சன் ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தந்தை, மகன் பலி: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் குப்பன்(65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பாலசுப்ரமணி(45). பாமக மாநில இளைஞரணி அமைப்பாளர். இருவரும் நேற்று சொந்த ஊரான கொரால்பாக்கம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். போளூர் பைபாஸ் சாலையில், ஆந்திராவை சேர்ந்தவர்களது காரை முந்தி செல்ல பாலசுப்பிரமணி முயன்றபோது, பைக் மீது கார் மோதி இருவரும் கீழே விழுந்து பலியாகினர். பின்னால் வந்த திருவண்ணாமலை தாலுகா, ராமாபுரத்தை சேர்ந்த சேட்டு(49), மாதவன்(45) ஆகியோரது பைக்கும் கார் மீது ேமாதியதில் இருவரும் காயம் அடைந்தனர்.

Advertisement

Related News