தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆம்புலன்ஸ் மீது கார் மோதி 2 பேர் பலி

*6 பேர் படுகாயம்

பாலக்காடு : திருச்சூர் அருகே ஆம்புலன்சும், காரும் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.கேரளமாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து நேற்று முன்தினம் நோயாளியை ஏற்றி கொண்டு கண்ணூர் நோக்கி ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திருச்சூர் அடுத்த குன்னம்குளம் காணிப்பையூர் அருகே எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக ஆம்புலன்ஸ் மீது மோதியது.

இதில், ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் பயணித்த நோயாளியான கண்ணூரை சேர்ந்த குஞ்ஞிராமன் (83), காரில் பயணித்த குன்னம்குளத்தைச் சேர்ந்த அந்தோணியின் மனைவி புஷ்பா (55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

ஆம்புலன்ஸ் டிரைவர் அனீஷ் (40), நர்சு விபின் (35), காரில் வந்த சந்திரன் (60), ஷாஜூ (46), வினோத்குமார் (54), புஷ்பாவின் கணவர் அந்தோணி (59) ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் குன்னம்குளம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவயிடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொது மக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு குன்னம்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக குன்னம்குளம்- திருச்சூர் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னம்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.