269 ரன் விளாசி புதிய சாதனை; கேப்டன்சி அழுத்தம் கில்லின் பேட்டிங்கை பாதிக்கவில்லை: ரவீந்திர ஜடேஜா பேட்டி
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஒல்லிபோப் ஆகியோர் ஆகாஷ் தீப் பந்தில் அடுத்தடுத்த பந்தில் டக்அவுட் ஆகினர். ஜாக் கிராலி 19 ரன்னில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். 25 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஜோ ரூட்(18 ரன்), ஹாரி புரூக் (30 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். நேற்றைய 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது. இதனிடையே நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாகூறியதாவது: நான் களம் இறங்கியபோது பந்து புதியதாக இருந்ததால் பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தேன். புதிய பந்தை விளையாட முடிந்தால், மீதமுள்ள இன்னிங்ஸ் எளிதாகிவிடும் என்று உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக மதிய உணவு இடைவேளை வரை நான் பேட்டிங் செய்ய முடிந்தது.
பின்னர் வாஷிங்டன் சுந்தரும், கில்லுடன் `தில்லாக’ பேட்டிங் செய்தார். இங்கிலாந்தில் எவ்வளவு அதிகமாக பேட் செய்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. அணிக்காக பேட்டிங் மூலம் பங்களிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. 5 விக்கெட்டுக்கு 210 ரன்களில் இருந்து அணியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை ஒன்றாக இணைப்பது ஒரு சவாலாகும். நான் அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். கேப்டனுடன் இணைந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை ஒன்றாக இணைக்க முடிந்தால், அது ஒரு கிரிக்கெட் வீரராகவும், பேட்ஸ்மேனாகவும் நம்பிக்கையை அளிக்கும். வரவிருக்கும் போட்டிகளிலும் என்னால் பேட்டில் பங்களிக்க முடியும். கில் அருமையாக பேட் செய்தார். கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங்கை பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.