தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விஜய் பேச்சு குறித்து கருத்து சொல்ல முடியாது: பிரேமலதா பேட்டி

 

Advertisement

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: விஜய் பேச்சு அரசியல் நாகரிகமா என விமர்சனம் எழுந்துள்ளது. அவரவர் பேசுவது அவரவர் ஸ்டைல். விஜய் பேசுவது அவரது ஸ்டைல். இதில் கருத்து சொல்ல முடியாது. மற்றவர் கருத்தை யாரும் கேட்பதில்லை. கருத்து சொல்லும் இடத்தில் நாங்களும் இல்லை. கட்சி தொடங்கியவர்களுக்கு தெரியும். அவர்கள் ஒரு கணிப்பில் வருகிறார்கள். இதில் கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமர்சனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை. விஜய் 2 மாநாட்டை முடித்துள்ளார். தற்போது மக்கள் சந்திப்பை தொடங்கியுள்ளார், வரட்டும் பார்ப்போம்.

சினிமா துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சவால்களை முறியடித்து வெற்றி பெறும்போது தான் மக்களால் அங்கீகரிக்கப்படுவர். அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ கிடையாது. நாங்கள் வெறும் ராஜ்யசபாவை (எம்பி பதவி) மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள் கிடையாது. உரிய நேரம் வரும்போது கூட்டணியை அறிவிப்போம். சினிமாவிலேயே எல்லாரும் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். கேப்டன் எங்கள் குடும்ப சொத்து, கட்சி சொத்து இல்லை. அவர் தமிழக மக்களின் சொத்து. உரிமையுடன் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனர். நாங்கள் நிச்சயம் தடுக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement