122 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவான 3 பேர் அதிரடி கைது: கோவையில் பதுங்கியவர்களை அமுக்கிய போலீசார்
Advertisement
இந்த வழக்கில் எஞ்சிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குன்றக்குடி போலீசார் கோவை விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த காரைக்குடியைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் திருப்பதி (22), அருணாசலம் மகன் மணிவாசகம் (22), சரவணன் மகன் மலைராஜ் (22) ஆகிய மூவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ.க்கள் பிரேம்குமார், ராமநாதன் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்தார்.
Advertisement