தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

122 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவான 3 பேர் அதிரடி கைது: கோவையில் பதுங்கியவர்களை அமுக்கிய போலீசார்

காரைக்குடி: காரைக்குடி அருகே, 122 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாகி கோவையில் பதுங்கியிருந்த 3 பேரை, குன்றக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பாதரக்குடியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குன்றக்குடி போலீசார் கடந்த ஜூன் மாதம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டூவீலருடன் நின்றிருந்த 8 பேர், போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று பார்த்தபோது, 122 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களில் 5 பேரை 24 மணி நேரத்தில் திருச்சி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Advertisement

இந்த வழக்கில் எஞ்சிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குன்றக்குடி போலீசார் கோவை விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த காரைக்குடியைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் திருப்பதி (22), அருணாசலம் மகன் மணிவாசகம் (22), சரவணன் மகன் மலைராஜ் (22) ஆகிய மூவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ.க்கள் பிரேம்குமார், ராமநாதன் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்தார்.

 

Advertisement

Related News