தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தன்னை முதல்வராக்கியவரையே யார் என்று கேட்டவர் துரோகத்தை பற்றி எடப்பாடி பேசலாமா?: அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருடம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலை புளியந்தோப்பு மற்றும் சூளையில் நடந்த அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, ஏழை எளிய பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சியினர் முதல்வரை சந்திப்பது துரோகத்தின் வெளிப்பாடு என்று தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி அமித்ஷாவை சந்தித்ததை எப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மோடியை 4 கார்களில் மாறி மாறி சென்று ரகசியமாக சந்திப்பதை எப்படி எடுத்துக் கொள்ளலாம். முதல்வரின் உடல்நல பாதிப்பு குறித்து நலம் விசாரிக்க, அவரது இல்லத்தில் வந்து ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை எப்படி துரோகம் என்று சொல்ல முடியும். மனிதநேயம் உள்ள, மனிதாபிமானம் உள்ள யாரும் இதனை துரோகம் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னை முதல்வராக்கி அழகுபார்த்த சசிகலாவையே யார் என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி துரோகத்தை பற்றி பேசலாமா? இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, பகுதி செயலாளர் சோ.வேலு, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related News