தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு: 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடிவு, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாட்டில் புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தை முதல் 74 வயது வரையிலான வாழ்நாள் முழுக்க புற்றுநோய் ஏற்படும் சாத்தியம் 11 பேரில் ஒருவராக இருப்பதாகவும், இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 5 மண்டல புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளிட்ட 12 மூன்றாம் நிலை புற்றுநோய் சிகிச்சை மையங்களில் அதி நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன் கூடிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அதனை தொடர்ந்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் பரிந்துரை பரிசீலனைக்குப் பிறகு, புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், மாநில அரசால் 3 ஆண்டுகளில் ரூ.110.96 கோடி செலவில் இரண்டாம் நிலை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களும், மனிதவளமும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.110.96 கோடியை நிர்வாக ஒப்புதலாகவும், அதில் ரூ.73.96 கோடியை 2025-26 நிதியாண்டுக்கான நிதி ஒப்புதலாகவும், ரூ.19.60 கோடியை 2026-27 நிதியாண்டிற்காகவும், ரூ.17.40 கோடியை 2027-28 நிதியாண்டிற்காகவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேவையான உபகரணங்கள் அனைத்தும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக வாங்கப்படும். இதன் மூலம், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் புற்றுநோய் சிக்கலை தடுக்கும் முயற்சியாக, சிறந்த தரமான சிகிச்சை மற்றும் சோதனை வசதிகள் கட்டமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News