தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து: பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. எம்ஆர்பி மூலம் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத்துவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகளை
Advertisement

வழங்கினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொது கலந்தாய்வு மூலமாக பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நியமனம் நடந்தது. இந்நிலையில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் பல மருத்துவர்கள் பணியில் சேரவில்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற தேர்வாகி, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியில் சேராத 193 மருத்துவர்களின் பணி நியமனத்தை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். நியமனம் ரத்து செய்யப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கவோ, மூப்பு அடிப்படையில் மீண்டும் விண்ணப்பிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் உத்தரவில் கூறியுள்ளார்.

Advertisement

Related News