தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முறையாக கவனிக்காமல் கைவிட்டுச் சென்ற மகனுக்கு தானம் வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்

*திண்டுக்கல் கலெக்டரிடம் வயதான பெற்றோர் மனு
Advertisement

திண்டுக்கல் : முறையாக கவனிக்காத மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யவேண்டும் என்று, வயதான பெற்றோர் திண்டுக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, குல்லலக்குண்டு கிராமத்தை சேர்ந்த மகாமுனி (77), அவரது மனைவி சிட்டுவள்ளி (65) ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை சமாதானம் செய்த போலீசார், கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தப் பின் மகாமுனி கூறுகையில், ‘‘என்னுடைய சொத்துக்களை எனது மகனுக்கு தானமாக வழங்கினேன். அப்போது, எங்களை நல்ல முறையில் பராமரிப்பதாகவும், செலவுக்கு மாதந்தோறும் பணம் தருவதாகவும் கூறினார். ஆனால் கூறியதுபோல் செய்யவில்லை. இதனால் அவதிப்பட்ட நாங்கள் பிரச்னை குறித்து ஆர்டிஓவிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பாக புகார் மனு அளித்தோம். எங்கள் வயதின் அடிப்படையில் முதியோர்

பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.3,000 எனது வங்கிக் கணக்கில் செலுத்த ஆர்டிஓ உத்தரவிட்டார். ஆனால் 3 வருடங்களாகியும் மகன் எங்களுக்கு பணம் தரவில்லை. இதனால் மகனுக்கு தானமாக வழங்கிய சொத்து பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தேன். எங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு, நான் அளித்த கோரிக்கை மனு மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News