தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கனடா ஓபன் டென்னிஸ்; புயலாய் மாறிய பூஸாஸ்; காலிறுதிக்கு முன்னேற்றம்

டொரன்டோ: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிகா பூஸாஸ் அபார வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கனடாவின் டொரன்டோ நகரில் கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 4வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை ஜெஸிகா பூஸாஸ் (22), சீன வீராங்கனை ஸு லின் (31) மோதினர். முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் மோதியதால் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் பூஸாஸ் போராடி வசப்படுத்தினார். அடுத்து நடந்த 2வது செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் லின் எளிதில் கைப்பற்றினார்.

அதைத் தொடர்ந்து, 3வது செட்டில் சுதாரித்து புயலாய் ஆடிய பூஸாஸ் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற அவர், காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26), உக்ரைன் வீராங்கனை டயானா யஸ்ட்ரெம்ஸ்கா (25) மோதினர். இருவரும் சம பலத்துடன் மோதியதால் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக, வசப்படுத்தினர். அடுத்து நடந்த 3வது செட்டை, ரைபாகினா கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார். அதனால், காலிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறினார்.