கனடா ஓபன் காப் ஜோடி சாம்பியன்: ஒற்றையர் பிரிவில் பைனலில் ஷெல்டன், கச்சனோவ், ஒசோகா, எம்போகோ
டொரண்டோ: கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. அரையிறுதி போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்க வீரர்கள் பென் ஷெல்டன், டெய்லர் ப்ரிட்ஸ் மோதினர். இதில் 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஷெல்டன் இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் மோதினர்.
இதில் 6-3,4-6,7-6 என்ற செட் கணக்கில் கச்சனோவ் போராடி வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதி போட்டியில் ஷெல்டன், கச்சனோவ் மோத உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நயோமி ஒசாகா, டென்மார்க்கை சேர்ந்த கிளாரா டாசன் ஆகியோர் மோதினர். இதில் 6-2,7-6 என்ற நேர் செட் கணக்கில் டாசனை வீழ்த்தி ஒசோகா இறுதி போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கனடா வீராங்கனை விக்டோரியா எம்போகோ, கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா ஆகியோர் மோதினர்.
இதில் 1-6,7-5,7-6 என்ற செட் கணக்கில் ரைபாகினாவை வீழ்த்தி எம்போகோ இறுதி போட்டிக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த கோகோ காப், மெக்கார்ட்னி கெஸ்லர் இணையும்,சீனாவை சேர்ந்த ஜாங் ஷுவாய், அமெரிக்காவை சேர்ந்த டெய்லர் டவுன்சென்ட் இணையும் மோதியது. இதில் 6-4,1-6,13-11 என்ற செட் கணக்கில் டவுன்சென்ட், ஷுவாய் ஜோடியை வீழ்த்தி காப் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
* ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி போட்டியில் அமெரிக்கா ஜோடி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த நீல் ஸ்குப்ஸ்கி, ஜோ சாலிஸ்பர் இணையும்,அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஆன்ட்ரேஸ் மோல்டெனி, பெர்னாண்டோ கோன்சாலெஸ் இணையும் மோதினர். இதில் பிரிட்டன் ஜோடி 7-6,6-2 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினா ஜோடியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.