கேபினட் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் கர்நாடகாவை ஏன் கேட்க வேண்டும் ? உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
Advertisement
ஆனால் அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘ தீர்ப்பாயம் அமைக்காதது ஏன் என்பது மட்டும் தான் எங்களது கேள்வி. குறிப்பாக ஒன்றிய கேபினட் முடிவெடுக்க வேண்டிய இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசிடம் ஒன்றிய அரசு ஏன் கேட்க வேண்டும் என கூறுவது ஏன் என்று தெரிவியவில்லை என காட்டமாக தெரிவித்தனர். ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர்,‘‘ நீர் பங்கீடு விவகாரத்தில் பேச்சு மூலம் தீர்வு காண முடியாவிட்டால் ஒரு வருடத்தில் தீர்ப்ப்பாயம் அமைக்க வேண்டும் எனக் கூறினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,‘‘ பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் புதிய பேச்சுவார்த்தை குழுவை உருவாக்க வேண்டும். அந்த குழு தனது அறிக்கையை அடுத்த மூன்று மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
Advertisement