தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்கிறார்: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்

புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

Advertisement

இதையடுத்து, நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று ராஜினாமா செய்தார். இதனால், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திற்கு கூடுதல் பொறுப்பாக மகாராஷ்டிரா ஆளுநர் பணிகளை ஒதுக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement