தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளவங்கோடு இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 2 ஓட்டு போட்ட வாக்காளர்கள்

நாகர்கோவில்: விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தொகுதி வாக்காளர்கள் கன்னியகுமாரி மக்களவை தொகுதிக்கு சேர்த்து 2 வாக்குகளை பதிவு செய்தனர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தலும் நடந்தது.
Advertisement

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், அதிமுக சார்பில் ராணி, பா.ஜ சார்பில் நந்தினி உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 876 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 741 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இடைத்தேர்தலுக்காக 272 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஒரு இயந்திரமும், மக்களவை தேர்தலில் 22 வேட்பாளர்கள் களத்தில் நிற்பதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொருவரும் இரண்டு வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மலையாள மொழி பேசும் வாக்காளர்கள் வசித்து வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் விபரங்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் இடம் பெற்றிருந்தன.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. 10 மணி நிலவரப்படி 10.64 சதவீதமும், 11 மணிக்கு 22.17 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 34.39 சதவீதமும், மாலை 3 மணிக்கு 45.27 சதவீதமும், 6 மணிக்கு 65.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

 

Advertisement