தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே பரபரப்பு கன்டெய்னர் லாரி தீப்பிடித்து 40 பைக்குகள் எரிந்து நாசம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் உள்ள குடோனில் இருந்து, மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியில், தனியார் நிறுவனத்தின் பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 டூவீலர்கள் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த லாரி ஓசூர் நோக்கி சென்றது. போடிச்சிப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, கன்டெய்னர் லாரி, சாலையில் இருந்த மின்கம்பி மீது உரசியதில், திடீரென தீப்பிடித்தது. அவ்வழியாக டூவீலர் மற்றும் கார்களில் சென்றவர்கள், இதுகுறித்து லாரி டிரைவருக்கு சத்தம் போட்டு கூறியபோதிலும், அவர் புரிந்து கொள்ளாமல் 5 கிமீ தூரம் ஓட்டி சென்று, சாலையோரம் கன்டெய்னர் லாரியை நிறுத்தினார். அதற்குள் கன்டெய்னர் லாரிக்குள் இருந்த டூவீலர்கள் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
Advertisement

இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி, தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் கன்டெய்னர் லாரியில் இரு அடுக்குகளில் கொண்டு சென்ற பைக் மற்றும் ஸ்கூட்டர் என 40 புதிய வாகனங்கள் எரிந்து எலும்பு கூடானது. இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Advertisement

Related News