தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பள்ளி நேரத்திற்கு ஏற்ப பேருந்து நேரம் மாற்றம்; திருப்போரூர் எம்எல்ஏவுக்கு மாணவர்கள் நன்றி

திருப்போரூர்: திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் தங்கி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு அளிக்கும் குறைகேட்போம், குறை களைவோம் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அருங்குன்றம் மற்றும் திருநிலை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண்.டி.31 என்ற நகரப்பேருந்து பள்ளி முடிவடையும் நேரத்தில் இயக்கப்படாமல் வேறு நேரத்தில் இயக்கப்படுகிறது. இதனால் வீட்டுக்கு நடந்தும் ஆட்டோவிலும் செல்ல வரவேண்டிய நிலையுள்ளது. இந்த பேருந்தை திருப்போரூர் வரை நீட்டித்து பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Advertisement

இதை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் பேசி (தடம் எண் டி.31) நகர பேருந்தை திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் வரை நீட்டித்தும், பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவும் கேட்டுக்கொண்டார். அதன்படி அருங்குன்றம், திருநிலை, மானாம்பதி வழியாக இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து திருப்போரூர் வரை நீட்டிக்கப்பட்டு பள்ளி முடியும் நேரத்தில் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக சட்டமன்ற உறுப்பினர் பாலாஜிக்கு அப்பகுதி மாணவர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செங்கல்பட்டு மண்டல மேலாளர் தியாகராஜன், செங்கல்பட்டு கிளை மேலாளர் சீனிவாசன், அருங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, சிறுதாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வேதா அருள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

Related News