தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கை வைத்த மாணவியின் கையாலேயே கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து சேவை!

Advertisement

விழுப்புரம்: பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு சுமார் 5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அரசு பள்ளி மாணவி தர்ஷினியின் கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உடனடியாக நிறைவேற்றினர். மாணவியின் ஊரான அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள பேருந்தினை தர்ஷினியே கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது;

சமீபத்தில் ‘ZEE தமிழ்’ தொலைக்காட்சியில் நடைபெறும் “சரிகமப “ இசை நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷினி என்ற மாணவி, பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு 5 கி.மீ தூரம் நடந்து செல்வதை சொன்னதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், அம்மணம்பாக்கம் கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வரை வழித்தடத்தில் பேருந்து சேவையினை, பள்ளி மாணவி தர்ஷினி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் சேகர், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் குணசேகரன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Related News