தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலதிபர் வீட்டை உடைத்து 85 சவரன், கார் திருடிய வாலிபர் கைது

Advertisement

திருவொற்றியூர்: மாதவரம், பொன்னியம்மன்மேடு, சி.ராமன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் வசித்து வருபவர் ஷாஜகான் (50). தொழிலதிபரான இவர், ரெட்டேரியில் மீன்களுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வதற்காக, கடந்த 28ம் தேதி, அவர் வசித்து வந்த வீட்டை பூட்டி விட்டு, புதிய வீட்டிற்கு சென்றார்.

பின்னர், அங்கிருந்து தனது வீட்டிற்கு ஷாஜகான் சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 85 சவரன் நகை மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த கார் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.

அதில், ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையத்தை சேர்ந்த தீனா (எ) முருகன் (25) என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த முருகனை, போலீசார் கைது செய்தனர். இவர் மீது வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, வழிப்பறி போன்ற 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. அவரிடம் இருந்து 29 சவரன் நகை, 1 கார், 2 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement