தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலில் பங்குதாரராக சேர்த்து கொள்வதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி: கடலூரை சேர்ந்த தொழிலதிபர் கைது

சென்னை: தொழிலில் பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாக கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.8.20 கோடி மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடலூரில் கைது செய்தனர். சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். ரியல் எஸ்டேட் அதிபரான இவரிடம் கடலூரை சேர்ந்த தங்கவேல் (56) என்பவர் அறிமுகமானார். அப்போது, பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் உங்களை தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பி வெங்கட்ராமன் பல இடங்களில் இருந்து நிலங்களை விற்பனை செய்து ரூ.7.25 கோடி பணம் மற்றும் கடனாக ரூ.75 லட்சம், புதிய தொழில் தொங்க ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.8.20 கோடி கொடுத்துள்ளார்.

Advertisement

பின்னர் சொன்னபடி தங்கவேல், கோத்தகிரி, நீலகிரி பகுதியில் இடங்கள் வாங்காமல் ஏமாற்றியுள்ளார். இதனால் கொடுத்த பணத்தை வெங்கட்ராமன் கேட்டுள்ளார். அதற்கு பணம் கொடுக்காமல் தங்கவேல் காலம் கடத்தி வந்துள்ளார். இதை தொடர்ந்து வெங்கட்ராமன் கடந்த 22ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேரில் சந்தித்து புகார் அளித்தார். புகாரின்படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்திய போது, ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கட்ராமனிடம் ஆசைவார்த்தை கூறி ரூ.8.20 கோடி பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த தங்கவேலை கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

Advertisement

Related News