தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காய்கறி வாங்க வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

Advertisement

ஒட்டன்சத்திரம்: பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ளூர் வியாபாரிகள், வெளிமாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகளும் வந்து காய்கறி வாங்கிச் செல்வர். இந்நிலையில், தொழிற்சங்கங்களின் பொதுவேலை நிறுத்த அறிவித்ததால், நேற்று கேரள உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய வரவில்லை. விவசாயிகளும் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவராமல் தோட்டங்களில் இருப்பு வைத்துக் கொண்டனர். நேற்று மட்டும் காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News