தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டுவில் மஞ்சளாற்றில் மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும்

Advertisement

*ஆற்றோர குடியிருப்பு வாசிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மர முட்செடிகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்றோர குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையிலிருந்து வத்தலக்குண்டு மஞ்சளாற்றுக்கு தண்ணீர் வருகிறது. புதுப்பட்டியில் இருந்து பெரியகுளம் சாலை, பிலிஸ்புரம், பெருமாள் கோயில், சங்கிலி கோயில், நடுத்தெரு, தெற்கு தெரு ஆகியவற்றையொட்டி ஊர் நடுவே செல்லும் மஞ்சளாற்றில் சீமை கருவேல மர முட்செடிகளும் மற்றும் செடி, கொடி புதர்களும் அனைத்து இடங்களிலும் நிறைந்து காணப்படுகிறது.

இதில் சீமை கருவேல மர முட்செடிகள் கோடை காலங்களில் மஞ்சளாற்றில் இருக்கும் குறைந்தளவு தண்ணீரையும் காலி பண்ணி விடுகிறது. மேலும் புதர்கள் மண்டி இருப்பதால் பாம்பு, தேள், நட்டுவாக்காலி போன்ற விஷ ஜந்துக்கள் மஞ்சளாற்றையொட்டி உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.

எனவே பொதுப்பணி துறையினர் மஞ்சளாற்றிலுள்ள சீமை கருவேல மர முட்புதர்கள் மற்றும் செடி- கொடி புதர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆற்றோர குடியிருப்புவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சின்னா கூறியதாவது: மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலும், ஆற்றில் புதர் மண்டியிருப்பதால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தாலும் தினசரி நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே பொதுப்பணி துறை அதிகாரிகள் புதர்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Related News