தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் நிறுத்தப்படும் பேருந்துகள்: சாலையை கடக்க முடியாமல் பயணிகள் அவதி

Advertisement

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டிலேயே பேருந்துகளை நிறுத்தி இறக்கி விடுவதால், எதிரும் புதிருமாக பயணிகள் சாலையை கடந்து வருகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது என பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் செல்கின்றன.

இந்நிலையில், தென் மாவட்டங்களுக்குச் சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி வரும் அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் வரும் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையின் நடுவில் நிறுத்தி இறக்கி விடுகின்றனர்.இதனால் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று உள்ளூர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளில் செல்வதற்காக குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் ஆபத்தான முறையில் ஜிஎஸ்டி சாலையை எதிரும், புதிருமாக கடக்கின்றனர்.

இதில் ஜிஎஸ்டி சாலையின் இரு புறங்களிலும் அதிவேகமாக வரும் வாகனங்கள் சாலையை கடக்கும் பொது மக்களை பார்த்து திடீர் பிரேக் போடுகின்றனர். இதனால் அடுத்தடுத்து வரும் வாகனங்கள் முட்டி மோதி நிற்கின்றன. இரவு நேரங்களில் அப்பகுதியில் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் எந்த நேரத்தில் பெரும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பயணிகள் சாலையை கடந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சாலையில் தடுப்புகளை அகற்றிவிட்டு சிசிடிவி கேமராக்களுடன் சிக்னல் அமைத்து பாதுகாப்பு பணியில் போக்குவரத்து துறை போலீசாரை அமர்த்தி அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அப்பகுதியில் எந்த ஒரு பேருந்துகளையும் நிறுத்தி பயணிகளை இறக்காமல் 300 மீட்டர் அருகிலேயே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் வளைவில் சென்று மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை இறக்கி விட்டுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement