தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுவை, கேரளாவில் பஸ், ஆட்டோ ஓடவில்லை

Advertisement

புதுச்சேரி: தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தி இன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு நடந்த போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் தனியார் பஸ், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. அரசு பள்ளி, கல்லூரிகளை தவிர பெரும்பாலான தனியார் பள்ளி, கல்லூரிகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. காரைக்காலில் மாங்கனி திருவிழா, பாகூரில் தேர் திருவிழா நடைபெறுவதால் அங்கு போராட்டத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு எச்சரிக்கை செய்திருந்ததால் அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்கு வந்திருந்தனர். இந்தியா கூட்டணியினர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளா: கேரளாவில் வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு உள்பட பல பகுதிகளில் பணிக்கு வந்த அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடுமையாக பாதிப்படைந்தனர். அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் வந்திருந்தனர். கேரளாவில் இருந்து நாகர்கோவில், கோவை, பழனிக்கு பஸ்கள் செல்லவில்லை. அதேபோல் பெங்களூரு உள்பட வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படவில்லை. கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்களும் களியக்காவிளையுடன் திருப்பி விடப்பட்டன. அதே நேரத்தில், கொச்சியில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

2 கிமீ நடந்த அமைச்சர்

கேரளாவில் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தொழிலாளர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, தனது வீட்டில் இருந்து சுமார் 2 கிமீ தூரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்களுடன் நடந்து சென்றார்.

Advertisement

Related News