தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி பஸ் நிலையத்தில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

தேனி : தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தேனி புதிய பேருந்து நிலையம் மதுரை சாலையில் இருந்து திண்டுக்கல் செல்லக்கூடிய பை-பாஸ் சாலையில் அமைந்துள்ளது.

Advertisement

இங்கிருந்து திண்டுக்கல், திருச்சி, கோவை, சென்னை, போடி, மூணாறு, மதுரை நெல்லை, கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்தப் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் பூங்காவை தாண்டி பஸ் நிலையத்திற்குள் செல்லக்கூடிய பகுதியில் போர்டிகோ அமைக்கப்பட்டுள்ளது இந்த போர்டிகோவில் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளுக்கானபுக்கிங் சென்டர், ஏடிஎம் மையம், பொருள்கள் வைப்பறை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வந்து செல்வதற்கும், காத்திருப்பதற்கும் இட வசதி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் சமீப காலமாக பயணிகளின் உறவினர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், பஸ் நிலையத்திற்குள் கடைகளை நடத்தும் வியாபாரிகள் ஆகியோர் தங்களது டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் போர்டிகோ வழியாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் 4 இடங்களில் டூவீலர் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காப்பகங்களில் வாகனங்களை நிறுத்தாமல் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வழி ஆக்கிரமிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நகராட்சி அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

Related News