தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு பிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டம் வன்முறையில் ஈடுபட்ட 200 பேர் கைது

பாரிஸ்: பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த பிரான்கோயிஸ் பேரோ கொண்டு வந்த செலவு குறைப்பு திட்டம் கூட்டணி கட்சிகள் இடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரோவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் பதவியில் இருந்து விலகினார்.

Advertisement

இதையடுத்து புதிய பிரதமராக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் கெல்கோர்னுவை பிரதமராக நியமித்து அதிபர் மேக்ரோன் உத்தரவிட்டார். மேக்ரோனின் பதவி காலத்தில் 6 பிரதமர்கள் இருந்தனர். தற்போது 7 வதாக செபாஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உள்பட பல இடங்களில்  போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement