தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓடும் பஸ்சில் ரகளை செய்ததை கண்டித்த பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்த வாலிபர் கைது

செய்யாறு: ஓடும் பஸ்சில் ரகளை செய்ததை கண்டித்த பெண் போலீசின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்கார்குளத்ைத சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி கண்மணி(35). இவர் சென்னை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி மாலை பணி முடிந்த பின்னர் தனியார் பஸ்சில் ஐயங்கார்குளத்திற்கு வந்தார். அப்போது அந்த பஸ்சில் ஒரு வாலிபர், பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த கண்மணி, அந்த வாலிபரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.

Advertisement

ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீஸ்காரர் கண்மணி, அந்த வாலிபரிடம் தொடர்ந்து ரகளை செய்தால் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கண்மணியை ஆபாசமாக பேசியதுடன், அவரது கன்னத்தில் பளார் என அறைந்தாராம். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் போலீஸ்காரர் கண்மணி மட்டுமின்றி பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கண்மணி தூசி ேபாலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, போலீஸ்காரரை அறைந்த வெம்பாக்கம் அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement