தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியானாவில் பஸ் தீப்பிடித்து 9 பேர் பலி: ஓட்டுநரின் அலட்சியம் பயணிகளின் உயிரை பறித்தது

குருகிராம்: அரியானாவில்பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உடல் கருகி இறந்தனர். ஓட்டுனரின் அலட்சியத்தால்தான் 9 பேர் உயிரிழந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் 60 பேர் உபியில் உள்ள மதுரா, பிருந்தாவன் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை அரியானா, நூஹ் மாவட்டம், துலாவத் பகுதியில் வந்த போது பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.
Advertisement

இதை பார்த்த கிராம மக்கள் ஓட்டுனரை எச்சரித்து பஸ்சை நிறுத்துமாறு கூறினர். ஆனால் ஓட்டுனர் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். இதில் பஸ் முழுவதும் தீ பரவி 5 பெண்கள் உட்பட 9 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.17 பேர் படுகாயமடைந்தனர். தீ பரவியதும் ஆண்கள் சிலர் பஸ்சில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் உயிர் தப்பிய ராகேஷ் குமார்(60)‘‘ தீப்பிடித்ததும் பஸ்சை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியும் அவர் அதை அலட்சியப்படுத்தி வேகமாக ஓட்டியதால் பஸ்சுக்குள் தீ பரவி 9 பேர் பலியாகினர். இந்த விபத்தில் பையில் இருந்த பணம் மற்றும் நகைகள் தீயில் கருகின’’ என்றார். இதுகுறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Advertisement