தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்கள் மோதல் : 30 பயணிகள் படுகாயம்

Advertisement

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அடுத்த கோகவரம் நோக்கி தனியார் சுற்றுலா சொகுசு பஸ் பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. அந்த பஸ் இன்று அதிகாலை தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா பைபாஸ் கடகம்மா குடம் அருகே பயணிகளை இறக்கிவிடுவதற்காக சாலையோரம் நின்றது. பயணிகள் இறங்கியவுடன் சொகுசு பஸ்சை அதன் டிரைவர் மீண்டும் இயக்கியபோது பின்னால் வந்த தெலங்கானா மாநில அரசு அதிவிரைவு சொகுசு பஸ் தனியார் சொகுசு பஸ் மீது மோதியது.

இதில் தனியார் சொகுசு பஸ்சின் பின்புறம், அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் 2 பஸ்களில் இருந்த 30 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் கோதாடா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement