தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம்; பஸ்சை மறித்து குத்தாட்டம்: 6 பேர் கைது

Advertisement

பள்ளிபாளையம்: ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை டிவியில் பார்த்து ரசித்த, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் சிலர், நள்ளிரவு 12 மணியளவில் நான்கு ரோடு பகுதியில் திரண்டனர். அப்போது 3 டூவீலர்களில் வந்த 6 இளைஞர்கள், ஆபத்தான வகையில் சாகசம் செய்தனர். பின்னர் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து, பஸ்சின் முன் குத்தாட்டம் போட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் குத்தாட்டம் போட்டது ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த வீரமணி, சௌரவ், யுவராஜ், தியாகு, சச்சின் மற்றும் ஒருவர் என்பது தெரியவந்தது. அவர்கள் மீது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்யப்பட்டது. கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இது போன்று ஈடுபட்டு விட்டதாகவும், இனிமேல் இதுபோன்ற இடையூறான செயலில் ஈடுபடமாட்டோம் என அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனர்.

Advertisement

Related News