தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ் மீது லாரி மோதல்; பெண் உள்பட 2 பேர் பலி: 8 பயணிகள் படுகாயம்

திருமலை: புதுச்சேரிக்கு சென்ற தனியார் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2பேர் இறந்தனர். 8பயணிகள் படுகாயம் அடைந்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து புதுச்சேரிக்கு 33 பயணிகளுடன் தனியார் பஸ் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 12.30 மணியளவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆலகட்டா அடுத்த பேராய்பள்ளே மெட்டா என்ற இடத்தில் பயணிகள் கழிவறை செல்வதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த லாரி, பஸ்சின் பின்புறத்தில் மோதியது. இதில் பஸ், முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதனால் பஸ்சின் பின்பகுதியும், முன்பகுதியும் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகள் அலறி துடித்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் பத்ரிநாத், ஹரிதா என்ற 2பேர் உடல் நசுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நந்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆலகட்டா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் பலியான 2பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நந்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஆலகட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து படுகாயம் அடைந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்தும், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News