தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டு காதலிக்க கட்டாயப்படுத்தி மாணவிக்கு கத்திக்குத்து: வாலிபருக்கு வலை

Advertisement

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். விருத்தாசலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி 2 மகள்களையும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர். மூத்த மகள் 12ம் வகுப்பும், இளைய மகள், 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை இருவரும் பள்ளிக்கு செல்வதற்காக விருத்தாசலம் கடைவீதியில் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினர்.

அப்போது ஒரு வாலிபர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை திடீரென பேருந்திலிருந்து கீழே இழுத்து தள்ளியுள்ளார். நிலைகுலைந்து விழுந்து மாணவியை அந்த வாலிபர் தாக்கியதுடன் என்னை காதலிக்க மாட்டாயா எனக்கூறி கையில் இருந்த பேனா கத்தியால் தலையில் குத்தியுள்ளார். இதில் தலையில் இருந்து ரத்தம் கொட்டி மாணவி மயங்கி சாய்ந்தவர். அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே அந்த வாலிபர், மற்றொரு வாலிபரின் பைக்கில் ஏறி தப்பிவிட்டார். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், அந்த வாலிபர் கோபாலபுரம் புதுரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பதும், பத்தாம் வகுப்பு படித்தபோதிலிருந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாகவும், தாயிடம் கூறியதையடுத்து அவர் அருண்குமாரை கண்டித்துள்ளார். அதன்பின் சந்திக்காமல் இருந்த அருண்குமார் நேற்று மீண்டும் மாணவியை சந்தித்து காதலிக்க வற்புறுத்தி கத்தியால் குத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமார் மற்றும் அவருடன் வந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News