தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரி மீது பஸ் மோதி கண்டக்டர் பரிதாப பலி: 30 பயணிகள் காயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலியானார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கோவை உக்கடத்திலிருந்து இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 35க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பஸ்சை திண்டுக்கல்லை சேர்ந்த காசிராஜன் (52) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை பாலசுப்பிரமணியன் (44) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

Advertisement

பொள்ளாச்சி அருகே கோவை ரோடு ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வரும்போது, ஏற்கனவே சிறு விபத்தில் சிக்கி சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி பின்புறம் அரசு பஸ் மோதிய வேகத்தில் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் மோதியதில் அதில் பயணம் செய்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். விபத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.

பஸ்சின் இடதுபுற சீட்டில் அமர்ந்திருந்த கண்டக்டர் பாலசுப்பிரமணியன் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பயணிகள் 30 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்த தாலுகா ஸ்டேஷன் போலீசார் விரைந்து சென்று, விபத்தில் சிக்கி உயிரிழந்த பாலசுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை அதே மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement