தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புல்லட் பைக் ஓட்டிய வாலிபர்; அரசு பஸ் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலி!

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மருதபாண்டியன் (34). தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் இன்று மதியம் தனது புல்லட் பைக்கில் வீட்டில் இருந்து காரை சென்றார் வந்தார். மீண்டும் பைக்கில் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் காரை - தெரணி செல்லும் சாலையில் பாட்டப்பன் கோயில் அருகே செல்லும் போது பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்ட மருதபாண்டியன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மருதபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருதபாண்டியன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு முன்பு திரண்டு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அரசு பேருந்து டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் எறையசமுத்திரத்தை சேர்ந்த அழகுதுரை மகன்

சந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News