தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் புல்டோசர் ஏவிவிட்டு அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் ? : உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி :ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால் அவரது வீட்டை எப்படி இடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு வினவியுள்ளது. புல்டோசர் கொண்டு வீடுகளை இடிப்பதை எதிர்த்து ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத்கான், ம.பி.யை சேர்ந்த முகமது ஹீசைன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பழிவாங்கும் நடவடிக்கையாகவே வீடுகள் இடிக்கப்படுவதாக மனுக்களில் அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.
Advertisement

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர்களின் வீடுகள், சொத்துகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பிறப்பித்த உத்தரவில்,"ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார் என்றால், அவரது வீட்டை எப்படி இடிக்கலாம்? அவர்

தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரது வீட்டை சட்டத்துக்கு புறம்பாக இடிக்கக் கூடாது.குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதாலேயே அவரது வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பதை அனுமதிக்க முடியாது.

குற்ற வழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டதாலேயே ஒருவரது வீட்டை எப்படி இடிக்கலாம்?. சட்ட விரோத கட்டுமானங்களை நாங்கள் பாதுகாக்கவில்லை. அதேவேளையில், அவ்வகை சொத்துகளை அகற்றும் விதிகளை பின்பற்ற வேண்டும்.நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்,"இவ்வாறு தெரிவித்து மனுதாரர்கள் விளக்கமான பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு செப்டம்பர் 17-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement