தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எருமை மாடு முட்டி பெண் படுகாயம்; தந்தை, மகன் அதிரடி கைது

திருவொற்றியூர்: எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சைபெற்றுவரும் நிலையில், மாட்டின் உரிமையாளர்களான தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் சுற்றித்திரிந்த எருமை மாடு விரட்டி, விரட்டி பொதுமக்களை முட்டி தள்ளியது. இதில், அம்சா தோட்டம் தெருவை சேர்ந்த மதுமதி (33) என்பவர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று பொதுமக்களை முட்டி தள்ளிய எருமைமாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றி பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்தில் ஒப்படைத்தனர்.
Advertisement

இதுசம்பந்தமாக மதுமதி கொடுத்த புகாரின்படி, திருவொற்றியூர் போலீசார் 2 பிரிவு வழக்கு பதிவு செய்து மாட்டின் உரிமையாளர் குறித்து விசாரித்தனர். இதில், கோமாதா நகர் பகுதியை சேர்ந்த கோடீஸ்வரராவ், (51), இவரது மகன் வெங்கலசாய் (30) ஆகியோர் ஆந்திராவில் இருந்து மாடுகளை வாங்கிவந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து வாங்கிவந்த மாடுகளை லாரியில் இருந்து இறக்கும்போது தப்பியோடி கிராமத் தெருவுக்கு வந்ததாகவும் வாகனங்களின் ஹாரன் சத்தம் காரணமாக மிரண்டு ஓடி மக்களை முட்டியுள்ளது.இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து கோடீஸ்வரராவ், இவரது மகன் வெங்கலசாய் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுமதியை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு சந்தித்து ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

Advertisement

Related News