தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பக்கிங்காம் கால்வாயில் ரூ.204 கோடியில் இரும்புப் பாலம்: கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்

சென்னை: சென்னையில் நீலாங்கரை, ஈ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர் இணைப்புச் சாலை திட்டத்தில் இடம்பெறும் இரும்பு பாலத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் முக்கிய சாலைகளாக திகழும் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகளில் திருவான்மியூர் மற்றும் சோழிங்கநல்லூரில் மட்டுமே நேரடி இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த இரு பகுதிகளுக்கும் இடையே சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு நேரடி இணைப்பு சாலை எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு நீலாங்கரையில் இருந்து விமான நிலையத்திற்கு விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் புதிய சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை இணையும் இடத்திலிருந்து நீலாங்கரையை நேரடியாக இணைக்கும் சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

Advertisement

இதில் முக்கிய அம்சமாக பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ரூ.204 கோடி மதிப்பில், 335 மீட்டர் நிலத்தில், 6 வழிச்சாலையுடன் கூடிய இரும்பு பாலம் அமைய உள்ளது. இதில் 99 மீட்டர் பகுதி கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில் அந்த ஆணையம் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. திருவான்மியூர் மற்றும் சோழிங்கநல்லூருக்கு இடைப்பட்ட பகுதியில் நீலாங்கரை, ஓ.எம்.ஆர் சாலை இடையே இரும்பு பாலத்துடன் அமையும் நேரடி சாலையால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரும்பு பாலத்தை 5 மாதங்களில் கட்டமைத்து முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வர உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

Advertisement