தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புச்சி பாபு கிரிக்கெட் ஆக.18ம் தேதி தொடக்கம்

சென்னை: புச்சி பாபு நினைவு கிரிக்கெட் வரும் 18ம் தேதி துவங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) தலைவர் அசோக் சிகாமணி, புச்சிபாபு கிரிக்கெட் போட்டி தலைவர் டி.வி.ரவி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டிஎன்சிஏ சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் அகில இந்திய புச்சி பாபு நினைவு கிரிக்கெட் போட்டி, வரும் 18ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் ஐதராபாத் உட்பட பல்வேறு மாநில, மாநகரங்களைச் சேர்ந்த கிரிக்கெட் சங்கங்களின் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

டிஎன்சிஏ சார்பில் 2 அணிகள் களம் காண உள்ளன. இந்த 16 அணிகள் தலா 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் தலா ஒரு அணி அரையிறுதியில் களம் காணும். ஒவ்வொரு ஆட்டமும் தலா 3 நாட்கள் நடைபெறும்.

இறுதி ஆட்டம் மட்டும் 4 நாள் ஆட்டமாக நடத்தப்படும். இது செப். 6, 7, 8, 9ம் தேதிகளில் நடக்கும். எல்லா ஆட்டங்களும் சென்னையின் பல்வேறு கல்லூரி வளாகங்களில் நடைபெறும். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பையுடன் 3 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். மேலும் 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்ச ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும். இவ்வாறு தெரிவித்தனர்.

Related News