தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிஎஸ்பி கல்லூரிக்கு 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைப்பு.. விதிகளை பின்பற்றாத கல்லூரி மீது தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பி.எஸ்.பி. மருத்துவக் கல்லூரியில் இவ்வாண்டு 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. பிஎஸ்பி கல்லூரியில் இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் 100 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2024ல் 150 பேரை எம்பிபிஎஸ்-ல் சேர அனுமதித்த நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை பின்பற்றாததால் காஞ்சிபுரம் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரிக்கு 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 50 எம்.பி.பி.எஸ். இடங்கள் குறைக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இவ்வாண்டு மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் குறையும் அபாயம் உள்ளது.

நாடு முழுவதும் இவ்வாண்டு 766 மருத்துவக் கல்லூரிகளில் 1.15 லட்சம் எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரி, மதுரை எய்ம்ஸ், இஎஸ்ஐசியில் மொத்தம் 12,000 மருத்துவ இடங்கள் உள்ளன. மேலும், விதிமுறைகளை பின்பற்றாத ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு தேசிய மருத்துவ ஆணையம் முழுமையாக அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News