தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொடூரன்; மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்து கொடூர கொலை: பாலியல் வழக்கில் அலட்சியத்தால் நடந்த அவலம்

பிவண்டி: பாலியல் கொலை வழக்கில் கைதாகி காவல்துறை பிடியிலிருந்து தப்பிய கொடூரன், இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 7 வயது சிறுமியை சீரழித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் கடந்த 2023ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான நபர், இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் சென்றார்.

Advertisement

இந்நிலையில், வேறு ஒரு பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அறை எடுத்துத் தங்கிய அந்த நபர், தனது பக்கத்து வீட்டில் வசித்த 7 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளார். இதையடுத்து, தனது சொந்த மாநிலமான பீகாருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவரை அதே இரவில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம், காவல்துறையின் பெரும் அலட்சியத்தையும், வீட்டு உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நீதிமன்றக் காவலில் இருந்த குற்றவாளி எப்படி தப்பிச் சென்றான் என்பது குறித்து, அவரை அழைத்துச் சென்ற காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தப்பிச் சென்ற குற்றவாளிக்கு முறையான ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு இன்றி வாடகைக்கு அறை கொடுத்த வீட்டு உரிமையாளர் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisement

Related News