தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

63 வயது அண்ணன் மனைவியிடம் சில்மிஷம்: பிரபல ரவுடி அடித்து கொலை

கன்னியாகுமரி: 63 வயது அண்ணன் மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல ரவுடியை அடித்து கொன்ற அண்ணன் போலீசில் சரண் அடைந்தார். குமரி மாவட்டம் இரணியல் அருகே வடக்கு பேயன்குழியை சேர்ந்தவர் ராஜகோபால் என்ற ராஜன் (54). லாரி டிரைவர். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை காலி செய்து திங்கள்சந்தை, நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் ரவுடியாக வலம் வந்தார்.

Advertisement

கடந்த 2023ல் குளச்சலில் மது அருந்தும் தகராறில் அருள்பாபி என்ற எழுத்தாளரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் ராஜனை கைது செய்தனர். அவரை ஜாமீனில் எடுக்க யாரும் வராததால் கழிவறைக்குள் டைல்ஸ்களை உடைத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஜாமீனில் வந்த ராஜன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான வடக்கு பேயன்குழி வந்தார்.

அங்கு கோயிலுக்கு சொந்தமான கலையரங்கத்தில் தங்கி வந்தார். விபத்தில் சிக்கியதால் கைத்தடி உதவியுடன் நடந்து வந்தார். இந்த நிலையில் வடக்கு பேயன்குழியில் அண்ணன் உறவு முறையான கோபாலகிருஷ்ணனின் (63) 55 வயது மனைவியிடம், ராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.

தனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு கலையரங்கம் வந்து படுத்திருந்த ராஜனிடம் அத்துமீறல் குறித்து கேட்டார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரத்தில்கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்த கைத்தடியை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் ராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் இரணியல் காவல் நிலையத்துக்கு சென்று கோபாலகிருஷ்ணன் சரண் அடைந்தார்.

Advertisement

Related News